About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Wednesday, February 1, 2017

ஐயப்பன் விருத்தம்

ஆணை முகத்தோன் தம்பி
அருள் குமரனுக்குஇளையோன்
வானவர் போற்றும் வாணி வந்தனுக்கு அருளவே வேண்டும்
சேனையில் தலைவர் போற்றும் தென்குளத்தூரில் அய்யன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே
அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையை போற்றி
மந்திரம் கையில்ஏந்தும்  வாழ்குளத்தூரன் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம்செப்புமென்
கவி விளங்க கந்தனும் குருவும் வாணி கஜ முகன் காப்பதாமே
முந்திய சிவனார் போற்றி மோகினியாம் ஸ்ரீஹரி போற்றி மூர்கனாம் அசுரன் போற்றி ஸ்வாமி  இந்திர வரவும் ஏற்றி ஈசநார்  வேஷம் போற்றி பந்தடி  கமலம்  வெற்றி வந்ததோர் விரஹம் மாற்றி தர்ம
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தா
போற்றி போற்றி சாஸ்தா
நமக்குஉண்டு  தாய்தந்தை போல் வருவார் இந்த தனிவழிக்கே அவரை பார்த்தால் நமக்கேதும்  பயமெதும் இல்லை பயந்து பயந்து ஆற்றாமல் சொல்லி அபயமிட்டோடி வரும் சுரர்தமய் காக்கவே வரும் கரிய குன்று ஏறிய காவலனே
வாழையும் தெங்கும் வரிக்க பாழாவுடன்  மாங்கனியும் சோலையும் சுருள் வண்டு உலாவும் குளத்தூரின் பதியின் சென்றால் கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில் உன் காவில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவருக்கும்  சிங்கார வஞ்சி மலையேறி சனி வாரம் தொழுதபேருக்கும் மங்காத சர்வாபீஷ்டமும் கொடுப்பதாமே.......

No comments:

Post a Comment