ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயில்

பாபநாசம் அணைக்குச் செல்லும் பாதையில் காரையார் என்ற இடத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சொரிமுத்து அய்யனார், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வாழும் பல சமூக மக்கள் வணங்கும் தெய்வமாவார்.
சுவாமி அய்யப்பன் என்ற நாமகரணத்துடன் சபரிமலை உள்ளிட்ட பல தலங்களில் வழிபடப்படும் அந்தத் தெய்வமே இங்கு ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் ஆக வழிபடப்படுகிறார் என்று இக்கோயிலில் பொரிக்கப்பட்டுள்ள விவரம் கூறுகிறது.
![]() | ||
|
சாதீயத்தை ஒழிக்க முத்துப் பாட்டன் என்ற பெயரோடு மானுட ரூபத்தில் வந்த அய்யப்பன் இங்கு வாழ்ந்து வந்த வாலை பகடை என்பவரின் இரண்டு பெண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்து மறைந்ததாகவும், அவர்களே ஸ்ரீ சொரிமுத்து அய்யனாராகவும், அவரின் இரண்டு மனைவிகளான பொம்மக்கா, திம்மக்கா என்ற பெயர்களில் எழுந்தருளி அருள் பாலித்து வருவதாகவும் திருவிதாங்கூர் ஆவணம் கூறுகிறது.
![]() | ||
|
இக்கோயிலி்ல் காவல் தெய்வமாக பூதத்தார் வழிபடப்படுகிறார். பேச்சியம்மன் என்ற குல தெய்வம் இங்கு உள்ளது. இங்கு வரும் மக்கள் கிடா வெட்டி சாமிக்குப் படைத்து வணங்கும் வழக்கம் உள்ளது.
![]() | ||
|
அமைவிடம் : திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காரையார் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது.
தங்குமிட வசதி : பொதிகை மலை அடிவாரத்திலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் தங்கலாம் அல்லது அம்பாசமுத்திரத்தில் தங்கிக்கொண்டு இத்தலத்திற்கு வரலாம்.
விசேட நாட்கள் : தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இத்திருக்கோயிலிற்கு 2 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இத்திருக்கோயிலிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாகவும் சொல்கின்றனர்.

No comments:
Post a Comment