About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Friday, November 15, 2019

என் குருநாதன்

ஸ்ரீ குருநாதர் பாடல் .. அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி என்பது போல அவரது அனுக்ரஹத்தால்  பாடல் வரிகளை அவரே எடுத்து கொடுத்தது... சத்குருநாதரே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  எப்பொழுதும் உடன் இருந்து நல்வழிகாட்டி சகல சம்பத்துகளும் அருள வேண்டும் குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏💐🏵👑🌻🍇🍋🍍🏵🍏🍓🍅🍑👑🍒🔥🔥🔥🙏🙏🙏🙏

என் குருநாதா என் குருநாதா என் குருநாதா என் குருநாதா
மாலை அணிந்தோம் என் குருநாதா மலைக்கு செல்வோம்  என் குருநாதா

பூஜை முறைகள் கற்று தந்தாய்  அன்னதானம் செய்துவந்தாய்
அடியவர்கு அன்புஅருள் செய்தாய் அய்யனை காண அழைத்து சென்றாய்
 வன்புலி வாகனனை காண செய்தாய் வாழ்வில் ஏற்றம் தந்திட அருள்வாய்

உந்தன் கானம் காதில் ஒலிக்கும் எந்த நாளும் உனை மறவேனே
உன்னை நினைத்தால் ஒடி வாருவாய்  எந்தன் பிணியை நீக்கிடுவாயே
அன்புடனே எம்மை ஆட்கொள்வாயே
கோடி கோடி பிறவி எடுத்தும்  உன்னை போல் ஒரு குருநாதன் உண்டோ
சத்ரு சாபம் நீக்கிடுவாயே எம்  சந்ததியை நீர் தழைத்திடுவாயே

இருளை அகற்றி  ஒளியை தருவாய்  உன்னை நாங்கள் சரண் அடைந்தொமே
வாழ்வில் என்றும் ஏற்றம் தருவாய் உன்னை நாங்கள் சரண் அடைந்தொமே
உன்னை நாங்கள் உருகி அழைத்தால் வந்து நீயும் அருள்புரிவாயே
 உந்தன் பாதம் சரணடைந்தொமே எங்களை நீர் கரை எற்றுவாயே

அய்யனிடத்தில் அன்பு கொண்டாய் அவனிடமே சரண் புகுந்தாயே
அய்யனிடத்தில் அன்பு கொண்டாய் அவனிடமே சரண் புகுந்தாயே

என் குருநாதா என் குருநாதா என் குருநாதா என் குருநாதா