About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Sunday, January 6, 2019

தேஜோமயமான ஸ்ரீ சக்ர பீடம்
அதன் மேல் பக்தர்களுக்கு வாழ்வளிக்கும் பொற்கமல பாதங்கள்
பாதங்களை அலங்கரிக்கும் சதங்கை
இரு தொடை அழகும் இணைந்து தோன்றும் கம்பீரமான அழகு
கால்களை சுற்றி கட்டப்பட்டிருக்கும் வீரயோக பட்டம்
ஆழிலை ஒத்த வயிறு
தாமரை நிகர்ந்த தொப்புள்
அகன்று பரந்த மார்பு
முப்புரி நூல்
தோள்களில் வீர சங்கிலி கைகளில் வீர வளையல்கள்
சின்முத்திரை காட்டும் வலது கை
முட்டுகால் மீது படிந்து பாதங்களை சுட்டி காட்டும் இடது கை
விரல்களில் பாலக்காய் மோதிரம்
கண்டோர் மயங்கும் முகாரவிந்தம்
மௌனமாகவே  ஞான உபதேசம் புரியும் மந்தகாஸவதனம்
தீர்க்கமான நாசி
கருத்தை கவர்ந்து கருணை பொழியும் இரு கமலநயனங்கள்
பக்தர்களின் குறைகளை கேட்பதற்கென்றே உள்ள நீண்ட செவிகள்
பரந்த நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகம்
அசைந்து ஆடும் சுருள் குழைகல்
இதன் எல்லாவற்றுக்கும் மேலாக நவரத்தினங்கள் இழைத்த பொற் கீரிடம்
பாதாதி கேசமாக பார்க்கிறோம்
கேசாதி பாதமாக மீண்டும் கண்டு லயிக்கிறோம்
மாறி மாறி பார்த்து கொண்டே இருக்கிறோம்
கண்களில் நீர் பனித்துரை போல் துளிர்த்து நம் பார்வையை மறைக்கிறது
நாம் பட்ட கஷ்டமெல்லாம் எங்கோ மறைந்து விடுகிறது
கண்களையும் கருத்தையும் நீர்க்கும்  அழகை வர்ணிக்க முடியாமல் கலங்குகின்றோம்
அவ்வாறு அறிவார் அறிகின்றதெல்லாம் எவ்வாறு ஒருவர்க்க்கு  இசைவிப்பதுமோ என்றும்
ஆசான் நிகழும் துகளாயினப் பின் பேசா அனுபூதி பிறந்ததுமே என்றும்
எண்ணி புழங்காகிதம் அடைகின்றோம்

ஸ்வாமியே சரணம் ஐயப்பா  ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா