About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Friday, November 15, 2019

என் குருநாதன்

ஸ்ரீ குருநாதர் பாடல் .. அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி என்பது போல அவரது அனுக்ரஹத்தால்  பாடல் வரிகளை அவரே எடுத்து கொடுத்தது... சத்குருநாதரே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏  எப்பொழுதும் உடன் இருந்து நல்வழிகாட்டி சகல சம்பத்துகளும் அருள வேண்டும் குருநாதா 🙏🙏🙏🙏🙏🙏💐🏵👑🌻🍇🍋🍍🏵🍏🍓🍅🍑👑🍒🔥🔥🔥🙏🙏🙏🙏

என் குருநாதா என் குருநாதா என் குருநாதா என் குருநாதா
மாலை அணிந்தோம் என் குருநாதா மலைக்கு செல்வோம்  என் குருநாதா

பூஜை முறைகள் கற்று தந்தாய்  அன்னதானம் செய்துவந்தாய்
அடியவர்கு அன்புஅருள் செய்தாய் அய்யனை காண அழைத்து சென்றாய்
 வன்புலி வாகனனை காண செய்தாய் வாழ்வில் ஏற்றம் தந்திட அருள்வாய்

உந்தன் கானம் காதில் ஒலிக்கும் எந்த நாளும் உனை மறவேனே
உன்னை நினைத்தால் ஒடி வாருவாய்  எந்தன் பிணியை நீக்கிடுவாயே
அன்புடனே எம்மை ஆட்கொள்வாயே
கோடி கோடி பிறவி எடுத்தும்  உன்னை போல் ஒரு குருநாதன் உண்டோ
சத்ரு சாபம் நீக்கிடுவாயே எம்  சந்ததியை நீர் தழைத்திடுவாயே

இருளை அகற்றி  ஒளியை தருவாய்  உன்னை நாங்கள் சரண் அடைந்தொமே
வாழ்வில் என்றும் ஏற்றம் தருவாய் உன்னை நாங்கள் சரண் அடைந்தொமே
உன்னை நாங்கள் உருகி அழைத்தால் வந்து நீயும் அருள்புரிவாயே
 உந்தன் பாதம் சரணடைந்தொமே எங்களை நீர் கரை எற்றுவாயே

அய்யனிடத்தில் அன்பு கொண்டாய் அவனிடமே சரண் புகுந்தாயே
அய்யனிடத்தில் அன்பு கொண்டாய் அவனிடமே சரண் புகுந்தாயே

என் குருநாதா என் குருநாதா என் குருநாதா என் குருநாதா


Sunday, January 6, 2019

தேஜோமயமான ஸ்ரீ சக்ர பீடம்
அதன் மேல் பக்தர்களுக்கு வாழ்வளிக்கும் பொற்கமல பாதங்கள்
பாதங்களை அலங்கரிக்கும் சதங்கை
இரு தொடை அழகும் இணைந்து தோன்றும் கம்பீரமான அழகு
கால்களை சுற்றி கட்டப்பட்டிருக்கும் வீரயோக பட்டம்
ஆழிலை ஒத்த வயிறு
தாமரை நிகர்ந்த தொப்புள்
அகன்று பரந்த மார்பு
முப்புரி நூல்
தோள்களில் வீர சங்கிலி கைகளில் வீர வளையல்கள்
சின்முத்திரை காட்டும் வலது கை
முட்டுகால் மீது படிந்து பாதங்களை சுட்டி காட்டும் இடது கை
விரல்களில் பாலக்காய் மோதிரம்
கண்டோர் மயங்கும் முகாரவிந்தம்
மௌனமாகவே  ஞான உபதேசம் புரியும் மந்தகாஸவதனம்
தீர்க்கமான நாசி
கருத்தை கவர்ந்து கருணை பொழியும் இரு கமலநயனங்கள்
பக்தர்களின் குறைகளை கேட்பதற்கென்றே உள்ள நீண்ட செவிகள்
பரந்த நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகம்
அசைந்து ஆடும் சுருள் குழைகல்
இதன் எல்லாவற்றுக்கும் மேலாக நவரத்தினங்கள் இழைத்த பொற் கீரிடம்
பாதாதி கேசமாக பார்க்கிறோம்
கேசாதி பாதமாக மீண்டும் கண்டு லயிக்கிறோம்
மாறி மாறி பார்த்து கொண்டே இருக்கிறோம்
கண்களில் நீர் பனித்துரை போல் துளிர்த்து நம் பார்வையை மறைக்கிறது
நாம் பட்ட கஷ்டமெல்லாம் எங்கோ மறைந்து விடுகிறது
கண்களையும் கருத்தையும் நீர்க்கும்  அழகை வர்ணிக்க முடியாமல் கலங்குகின்றோம்
அவ்வாறு அறிவார் அறிகின்றதெல்லாம் எவ்வாறு ஒருவர்க்க்கு  இசைவிப்பதுமோ என்றும்
ஆசான் நிகழும் துகளாயினப் பின் பேசா அனுபூதி பிறந்ததுமே என்றும்
எண்ணி புழங்காகிதம் அடைகின்றோம்

ஸ்வாமியே சரணம் ஐயப்பா  ஸ்வாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா